Wednesday, February 20, 2008

தொடரும் பயணம்...

அந்த போலீஸ்காரரு நான் என்னமோ அந்த இன்டர்நேஷனல் ரயில்வே ஸ்டேஷன்க்கு பாம் வைக்கற மாதிரி என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு ஒழுங்கா ஜண்டு பாம்கூட தடவத்தெரியாது என்னை பாத்து.. இப்படி ஒரு சோதனை.. என்ன பண்றது இந்த உலகம் நல்லவங்க யாரைத்தான் நம்பி இருக்கு (சரி சரி பக்கத்துல இருக்கற யாரையும் அடிக்கக்கூடாது. என்னை நானே நல்லவனு சொல்லிக்காட்டி வேற யாரு சொல்லப்போறா).


அவரு பக்கத்துல வந்து டிக்கெட் காட்டச்சொன்னாரு. (என்னங்க அநியாயம் இது. பால் வடியற என் முகத்தை பார்த்ததுக்கப்புறமும் எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கத்தோணுது.) சரின்னு டிக்கெட் எடுத்துக் காட்டினேன். பாத்துட்டு சரின்னு போயிட்டாரு. (யாருகிட்ட இதெல்லாம்...) 12.16


போயிட்டாருன்னுதாங்க உங்களை மாதிரி நானும் நம்பினேன் அப்பாவியா.



அவரு ஸ்லோமோஷன்ல நடந்து போயி ஸ்டேஷன் மாஸ்டரிகிட்ட‌ (ஆமாங்க அங்க இருந்தது ஒரு பெண் மாஸ்டர் அப்ப அவங்க மாஸ்டரிதானே) ஏதோ சொல்லிட்டிருந்தாரு. சரி அவங்களுக்குள்ள 1009 கூட இருக்கும். நமக்கு எதுக்குங்க அதெல்லாம். 12.18


எப்பவும் போல வேடிக்கை பாத்துட்டு இருந்தேன் தண்டவாளத்தை. ஆமாங்க ஸ்டேஷன்ல ஒருத்தருமே இல்லைன்னா வேற எதை பாக்க முடியும் தண்டவாளத்தை தவிர. 12.19


திரும்பி பாத்தா அந்த இன்ஸ்பெக்டர், மாஸ்டரியோட சேர்ந்து என்னை பாத்து நடந்து வந்திட்டுருந்தாரு. அவங்க கூட இன்னும் ஒரு நாலு பேரு வந்திட்டிருந்தாங்க. என்னங்க ஒரு வருங்கால பிரபலத்தை தனியா நிக்ககூட விட மாட்டேன்றாங்க. எத்தனை ஆட்டோகிராப்தான் போடமுடியும் ஒரு நாளைக்கு. முடியலைங்க. (இது உங்க முடியலைங்க இல்லை என் முடியலைங்க)12.20


டிரெயின் வரதுக்கான அனௌன்ஸ்மென்ட்ட சொல்லாம எல்லாரும் என்கிட்ட வந்துட்டிருக்காங்க சே கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை இந்த ஜனங்களுக்கு.



எல்லாரும் என்கிட்ட வந்து என்னை சுத்தி நின்னாங்க. திடீர்னு பாத்தா அந்த மாஸ்டரி என் டிக்கெட் காட்டச்சொன்னாங்க. அப்ப ஆட்டோகிராப் மேட்டர் இல்லையா இது. சரின்னு அந்த டிக்கெட் எடுத்துக் காட்டினேன். அதென்ன ஷ்ரேயாவோட போட்டோவா இப்படி பாக்கறாங்க.. இப்ப டிரெயின் வருமா வராதானு சொல்ல ஒரு ஆள் இல்லை இப்படி கூட்டம் கூடறதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படியெல்லாம் ஒரு குரல் உள்ளே ஓடிட்டே இருந்துச்சு.. 12.25pm

சரிங்கய்யா... நல்லா பாருங்க... பார்த்துட்டு அந்த டிரெயின் எப்ப வரும்னு சொல்லுங்கய்யா சாமிகளான்னு கேட்டா எல்லார்கிட்ட இருந்தும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றாங்க... ஸ்லோமோஷன்ல நிமிந்து பாத்தாங்க ஒரே சமயத்துல... என்னதான்யா நடக்குது...

ஒரு வழியா அந்த டிக்கெட்ல இருந்து ஏதோ ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சு ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணாங்க..அய்யஹோ... என்ன கொடுமை சார் இது.. நாட்ல இப்படி எல்லாம் கூட நடக்குமா..ஏங்க எனக்கு மட்டும் இப்டி எல்லாம்.. ஏன் ஏன் ஏன்...இப்படி என்னை சுத்தியும் ஒரே கேள்விகளா சுத்துது...

அது என்னன்னு கேக்கறீங்களா... பின்ன இவ்வளவு பில்ட் அப் குடுத்துட்டு அதென்ன சொல்லித்தொலைன்னுதானே சொல்றீங்க... ம்ம்ம்ம் நீங்க இப்படி எல்லாம் கேட்டா நான் சொல்ல மாட்டேன். எனக்கு ஒரே அழுவாச்சியா வருது. அதுனால அந்த கிளைமாக்ஸ் மட்டும் அடுத்த பதிவுல சொல்றேன்...

No comments: