Saturday, December 19, 2009

அமைதி

இந்த ஒரு வாரம் மிகப் பெரிய சவால் எனக்கு. எனது வாழ்நாளில் நான் பேசாமல் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் இன்று அந்த சரித்திரம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க நான் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் நான் எப்போதும் பேசவேண்டும் என்றால். பார்ப்போம்.

Thursday, November 12, 2009

கற்புக்குச் சான்றிதழ் - அந்தக் கேள்வி

என்னுடைய கவிதைப் பதிவுகள் பகுதியில் இதை அடிப்படையாக வைத்து எழுதி இருந்த கவிதைக்கு நிறைய பின்னூட்டங்கள். ஆனால் எதற்காக அந்த பதிவு என்று தெரியாதவர்களுக்கு இந்த பதிவு


பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பெங்களூரு.
''எனக்குச் சமீபத்தில்தான் பெற்றோர் பெண் பார்த்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. மூன்று மாதம் கழித்துத் திருமணம் நிச்சயித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், எனது போனுக்கு அழைத்த அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப்பற்றி தப்புத் தப்பாகச் சொன்னார். நான் குழம்பிவிட்டேன். எனக்கு நிச்சயித்த பெண்ணின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொல்லி நான் வற்புறுத்த முடியுமா? அது எதுவும் சட்ட விதிமீறல் ஆகுமா?''

Friday, November 6, 2009

நானும் எழுதிட்டேன் திடுக்கிடும் உண்மைகள் லிஸ்ட்

என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு அழைத்து சிறப்பித்த முரளிக்கு முதற்கண் பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொல்கிறேன் (ஆமா அதே கொல்கிறேன் தான்). பின்னே என்னங்க இந்த மாதிரி வம்புல மாட்டிக்கக் கூடாதுன்னுதான்  கவிதைன்ற பேர்ல எதையோ எழுதி தப்பிச்சுட்டு இருந்தேன். மாட்டி விட்டுடியே பரட்டை. யாரும் ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டாங்களே ?

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்



3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.


4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.




பிடிச்சவங்க : என்னத்த சொல்ல. எனக்கு பிடிச்சவங்கள உங்களுக்கு புடிக்காம இருக்கலாம் உங்களுக்கு பிடிச்சவங்கள எனக்கு பிடிக்காம இருக்கலாம் இல்லை உங்களுக்கு பிடிச்சவங்களையே எனக்கும் பிடிக்கலாம் எனக்கு பிடிச்சவங்களையே உங்களுக்கும் பிடிக்கலாம் (அனு போதும் ஆரம்பத்துலையே உளறத் தொடங்கிட்டே இன்னும் என்ன எல்ல்லாம் எழுதப்போரயோ. கடவுள் விட்ட வழி)

பிடிக்காதவங்க  :இதுக்கு நிறைய காரணங்கள்  இருக்கும் ஆனா சொல்ல மாட்டேனே. ஆளச் சொல்வேன் ஆனாலும்


1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஒரு காலத்துல வை. கோ இப்போ தயாநிதி மாறன்
பிடிக்காதவர்: சொல்லலாமா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் பிடிக்காதவர் கலைஞர். அவரோட குடும்ப பாசம் பிடிச்சிருந்தாலும் கொஞ்சமாவது மக்களை பத்தியும் யோசிக்கலாம். 


2.எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா (அவர் இறந்தத இன்னும் ஒத்துக்க முடியல அதான் அவர் பேரும்) பாலகுமாரன், சுந்தர ராமசாமி, ராஜேஷ் குமார், படுதலம் சுகுமாரன் 
பிடிக்காதவர் : அனுராதா ரமணன் (இந்த அன்புடன் அந்தரங்கத்தை நிறுத்துங்க மேடம்) - முரளியை வழிமொழிகிறேன், ரமணிச் சந்திரன், சாரு, 


3.கவிஞர்

பிடித்தவர் :  மனுஷ்ய புத்திரன், வாலி, அய்யனார் , ரிஷான், ரமேஷ் பிரேம் 
பிடிக்காதவர் : பா. விஜய்


4.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்தினம், வெற்றிமாறன், k . s . ரவிக்குமார் (கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்), சுந்தர் C  (இயக்குனரா மட்டும்), KB , ருத்ரைய்யா,  மிஷ்கின், அமீர், சசிக்குமார்
பிடிக்காதவர் : பேரரசு, விசு, s . j . சூர்யா, லாரன்ஸ் ராகவேந்தரா


5.நடிகர்

பிடித்தவர் : ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், மணிவண்ணன், சத்யராஜ் , பிரபு தேவா (நடிகரா மட்டும்)
பிடிக்காதவர் : s . j . சூர்யா, சிம்பு (கோவில் படம் தவிர)


6.நடிகை

பிடித்தவர் : ஜோதிகா, பூஜா (ரொம்ப அழகா இருக்காங்க என்னை பொருத்தவரைக்கும்), ராதா,  ஊர்வசி ,  தனிஷா (காஜோல் தங்கச்சிங்க வேற என்ன வேணும் இருந்தாலும் ரொம்பவே அழகான பொண்ணு) , த்ரிஷா , நயன்தாரா
பிடிக்காதவர் : சினேகா, அம்பிகா, சதா, அசின்


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஹாரிஸ் ஜெயராஜ் (ரொம்ப நாளா ஒரே ட்யுன வச்சு ஓட்டிட்டு இருக்காரு) இன்னும் நிறைய பேர் இருக்காங்க


8. பாடகி

பிடித்தவர் :சித்ரா, ஸ்வர்ணலதா
பிடிக்காதவர் :அனுராதா ஸ்ரீராம்


9. தொழிலதிபர்
பிடித்தவர் :எங்க ஊர் முழுக்க தொழில் அதிபர்கள்தான் இதுல யார சொல்றது யார விடறது. அதுனால எல்லாரையும் புடிக்கும் (அப்பாடா தப்பிச்சாச்சு)
பிடிக்காதவர் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ்


10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : பாலாஜி, சின்மயீ
பிடிக்காதவர் : கோபிநாத்,  லட்சுமி (இது கதையல்ல ஜீவன - கன்னடத்துலையும் இந்த அம்மா இதையேதான் பண்ணிட்டு இருக்காங்க ), DD

பின்குறிப்பு : தோணின எல்லாம் எழுதிட்டேன் ஆட்டோ ஏதும் வந்துச்சு டேக் டைவர்சன்-னு சொல்லி முரளி விலாசத்துக்கு அனுப்பிடுவேன் .

விளையாட்டை விளையாட்டாகவே தொடர நான் அழைப்பது

1 . ராஜசேகர் (http://manathilpattavai.blogspot.com/)
2 . முத்து (http://onceinourlife.blogspot.com/)

Wednesday, October 21, 2009

அழகான வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு காரியம். ஒரு தாய் தன் மகளுக்கு தன் முகம் தெரியா நண்பர்கள் மூலம் வாழ்த்து சொல்லச் சொன்னது புதிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.


நான் ஒரு பயணம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இன்று அந்த email id-கு ஒரு mail வந்திருந்தது. தன் மகளுக்கு பிறந்த நாள் எனவும் நண்பர்களை வாழ்த்து சொல்லச் சொல்லியும். உடனே வாழ்த்துக்களை தெரிவித்தேன் இரவு 1 மணியாக இருந்த போதும். அந்த 16 வயது பெண்ணின் குரலில் இருந்த சந்தோசம் அழகாக இருந்தது. ரொம்ப சந்தோசம்.

Wednesday, September 16, 2009

தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இன்று முதல் இணைப்பு.

ஹ்ம்ம் பார்ப்போம் என்ன எழுதபோறேன்னு.

Sunday, September 13, 2009

அழகான கவிதை

http://www.youtube.com/watch?v=G6J6qVGL5lU

அழகான கவிதையாய் ஒரு விளம்பரம். உறவுகளின் அவசியத்தையும் அதனை கொண்டாடவேண்டியதின் ஆழத்தையும் உணர்த்தும் கவிதை. இதற்கு கவிதை எழுதிவிட முடியாது. அவசியமும் இல்லை என்றே உணர்கிறேன்.

Wednesday, September 9, 2009

படியுங்கள் புரியும் உணரும்

எதற்காக இந்த பாடல் இங்கு என்ற எண்ணம் வரலாம். எனினும் இந்த பாடல் கேட்ட தருணம் இங்கு முக்கியமானது. விடியற்காலை மூன்று மணி, சூழ்ந்த தனிமையின் விளைவாக ஏதோ யோசனையுடன் ஒரு படம் பார்த்த போது சட்டென கண்முன் விரிந்தது இந்த பாடலின் சூழல்.

When I was young
I never needed anyone
And making love was just for fun
Those days are gone
Livin alone
I think of all the friends Ive known
When I dial the telephone
Nobodys home

All by myself
Dont wanna be
All by myself
Anymore

Hard to be sure
Sometimes I feel so insecure
And loves so distant and obscure
Remains the cure

All by myself
Dont wanna be
All by myself
Anymore
All by myself
Dont wanna live
All by myself
Anymore

When I was young
I never needed anyone
Making love was just for fun
Those days are gone

All by myself
Dont wanna be
All by myself
Anymore
All by myself
Dont wanna live
Oh
Dont wanna live
By myself, by myself
Anymore
By myself
Anymore
Oh
All by myself
Dont wanna live
I never, never, never
Needed anyone

Thursday, August 27, 2009

பயணங்களின் தொடர்வில்



வெகு சமீபமாக ஒரு பயணத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல நண்பர்கள், பயணங்கள் எனது தனிமையை விரட்டி தூர துரத்திகொண்டு இருந்தது. என்னையும் மீறி என் வாழ்க்கையில் திடீரென பூ பூத்த மாதிரியான மாற்றங்கள். இதில் சந்தோஷத்தை தாண்டிய ஒரு பதற்றம் உள்ளது.

எதற்கோ தொடங்கி எங்கோ போய்கொண்டு இருக்கிறது பதிவு. பயணத்தை பற்றி பேசும்போது உடனிருந்தவர்களில் தொடங்கி போவது முக்கியமாக உள்ளது. இரு நண்பர்களுடன் ஒரு பேருந்தில் காலை மெல்லிய காற்றில் தொடங்கியது அந்த பயணம். நான்கு மணி நேர பயண களைப்பு தெரியாமல் பயணம் முடிந்தது. பல தடவை தனியாக பயணித்த பாதையாயினும் மனதுக்கு அருகில் இருக்கும் நண்பர்களுடான பயணம் புதிதாகவும் பலவற்றை யோசிக்கவும் வைத்தது. சுற்றி இருந்த உலகம் மறந்த பயணமாக இருந்தது.

இந்த பதிவு பயண சம்பவங்களை கடந்த மனிதர்களை பற்றியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

காலையில் கோவிலுக்குள் போகும்போது உடனிருந்த ஒரு நண்பர் வினோத் - மிக இயல்பாக பொருந்தி போனார். அதிகம் பேசவில்லை. அவரை பற்றி எந்த வித அனுமானத்துக்கும் வர இயலவில்லை. எதையும் அனுமானிக்கும் எண்ணமும் இல்லை. சாதரணமாக நடந்து போய்கொண்டிருந்தோம் கோவிலுக்குள். தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதாகட்டும் தெரியாதவற்றை ஒத்துகொள்வதாகட்டும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தினார் . எப்போதும் போல் எனது அறிவுரை படலத்தை தொடங்கினேன் ஆங்கில அறிவின் மேல் நமது மாணவர்களுக்கு இருக்கும் பயம் மற்றும் இருக்கவேண்டிய தேவை இல்லாததையும் பற்றி மிகபொறுமையாக கேட்டுகொண்டிருந்தார்.

அதன் பின் போனது பவா அவர்களின் வீட்டுக்கு. வெறும் வீடாக இல்லாமல் ஒரு இல்லமாக இருந்தது. ஒரு உயிர்ப்போடு இருந்த இல்லத்தை மிக நீண்ட நாட்களுக்கு பின் பார்த்தேன். சீராக அடுக்கப்பட்ட வீட்டின் மேல் எப்போதும் எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. பவா அவர்களின் இல்லம் வாழ்க்கையாக இருந்தது. குழந்தைகளின் இருப்பை அவர்கள் இல்லாமல் இருந்தும் உணர்ந்தேன். பல வீடுகளில் குழந்தைகள் மீதான புறக்கணிப்பை பார்த்திருக்கிறேன். காலம் கடந்த ஞானத்தோடு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைப்பதை தள்ளி நின்று சிறு சிரிப்போடு பார்த்திருக்கிறேன். குழந்தைகள் வளரும்போது பல பெற்றோர்கள் வளர்வதே இல்லை. ஆனால் மிக ஆனந்தமாக ஒரு பெரிய குதூகலத்துடன் வளரும் பெற்றோரை வேடிக்கை பார்த்தேன்.

இன்னும் வளரும்